வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 7 மார்ச் 2016 (14:37 IST)

இலங்கை அகதி உயர் அழுத்த மின்கம்பியைப் பிடித்து மரணம் [வீடியோ]

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவந்த ரவீந்திரன் என்பவர், அருகில் உள்ள மின்சார கோபுரத்தில் ஏறி உயர் மின் அழுத்த கம்பியைப் பிடித்து உயிரிழந்தார்.
 

 
ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி, ரவீந்திரனின் கடைசி மகன் அங்கு இல்லாததால் அவரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கவிருப்பதாகக் கூறியதையடுத்தே ரவீந்திரன் இவ்வாறு செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இதையடுத்து, அந்த வருவாய் அதிகாரி சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் வந்து அந்த அதிகாரியை மீட்டனர்.
 
இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.

வீடியோ கீழே:
 



நன்றி : நியூஸ் 7 தொலைக்காட்சி