1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 11 மே 2020 (17:09 IST)

தென்மேற்கு பருவமழை எப்போது? வானிலை மையம் தகவல்!

மே 16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
ஏற்கனவே தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே 16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேலும், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.