1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:00 IST)

மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த சிவசங்கர்பாபா: ஆகஸ்ட் 11ஆம் தேதி விசாரணை!

சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் தொல்லை செய்ததாக கூறப்பட்டது 
 
இதுகுறித்து பதிவு செய்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிவசங்கர் பாபா மீது புகார்கள் அடுத்தடுத்து குவிந்ததை அடுத்து அவர் இதுவரை மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் மூன்று வழக்குகளை அவர் சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார் 
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது ஜாமீன் மனு ஆகஸ்ட் 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.