1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (14:01 IST)

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் குண்டர் சட்டத்தில் கைது

சிவகங்கை அருகே, பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டா்.
 
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை அடுத்த பெரிய நரிக்கோட்டையில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக பணிபுரிந்தவர் முருகன்(45).
 
இந்த பள்ளியில் படித்த 6 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, தலைமையாசிரியர் முருகன் மீது, தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதன் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
ஆனால்,  தலைமையாசிரியர் முருகனை கைது செய்தது மட்டும் போதாது, அவர் மீது கடும் நவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களும், சமுக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து, போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில், தலைமையாசிரியர்  முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சித் தலைவர் முனுசாமிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை பரிந்துரை செய்தார்.
 
இதனையடுத்து, தலைமையாசிரியர் முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சித் தலைவர் முனுசாமி உத்தரவிட்டதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.