1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (14:33 IST)

பேருந்திலிருந்து கீழே விழுந்தும் உயிர்பிழைத்த அதிசய குழந்தை : மதுரையில் பரபரப்பு

மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய விவாகரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பேருந்தில், 7 மாத குழந்தையுடன் பயணித்த ஒரு தம்பதி, பஸ்ஸில் இடம் இல்லை என்பதற்காக படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தனர். இரவு நேரம் என்பதால் குழந்தையை மடியில் வைத்தவாறே அயர்ந்து தூங்கிவிட்டனர்.
 
பேருந்து போய்கொண்டிருக்கும் போது, அவர்கள் கையிலிருந்த குழந்தை  நழுவி கீழே விழுந்துவிட்டது. இதை அவர்கள் கவனிக்கவில்லை. அந்த சாலை வழியாக சென்ற ஒரு வேன் டிரைவர் இதை கவனித்துள்ளார். அவர் உடனே குழந்தையை எடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனியில் சேர்த்துள்ளார். மேலும், காவல் நிலையத்திலும் இந்த தகவலை தெரிவித்துவிட்டார்.
 
இதற்கிடையில், கண்விழித்துப் பார்த்த பெற்றோர்க்ள், தங்கள் மடியில் குழந்தை இல்லாத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வச்சகாரம்பட்டி காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அப்பொது அவர்களின் குழந்தை மருத்துவமனையில் இருப்பதை காவல் அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர். 
 
சிறு காயங்களுடன் இருந்த குழந்தைக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.