வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 நவம்பர் 2018 (20:42 IST)

புயல் வருது புயல் வருது... அதிமுகவை கலாய்த்த செந்தில் பாலாஜி

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகின்றதே தவிர நிவாரணப்பணிகளில் அரசு மெத்தன போக்கினை காண்பிக்கின்றது என கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
 
கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களுக்கு நிவாரணப்பணிகளை அனுப்பும் பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாய்கள், 5 கிலோ அரிசி சுமார் 5 ஆயிரம் பேக்குகள், வேஷ்டி, சட்டை, தண்ணீர் பாட்டில்கள் என்று சுமார் 7 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 
 
இதில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது. புயல் பாதித்த மாவட்டங்களில் முதலமைச்சர் மக்களை தரைவழியாக சென்று பார்வையிட பயம் ஏற்பட்டதனால்தான் விமான வழியாக சென்றுள்ளார். மேலும், புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள அமைச்சர்களும் நிவாரண பணிகள் மேற்கொள்ளும் போது, அவர்கள் தப்பி செல்லும் போது, மக்களின் கோபத்தினையும், அரசின் மீது ஏற்பட்டுள்ள கோபத்தினை தான் எதிரொலிக்கின்றது. 
 
தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கொடுக்கின்றோம் என்று மத்திய அரசு தமிழக அரசு ஒரு கண் துடைப்பிற்காகவும், வெற்று அறிக்கைகள் மூலமாகவே, செயல்பட்டு வருகின்றது. மேலும், புயல் பாதித்த இடங்களில் எந்த ஒரு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல், அரசு தவிக்கின்றது. 
 
ஆகவே மக்கள் தக்க பாடத்தினை தேர்தல் நேரத்தில் வெளிக்கொணர்வார்கள். மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும்,ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வும் தமிழக அரசினை பாராட்டியுள்ளார்களே என்று கேள்வி கேட்டதற்கு., புயல் வருவதற்கு முன்னர் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், ஆனால், தற்போது., புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகள் மெத்தனம் காண்பிப்பதாகவும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, இந்த கஜா புயலை பொறுத்தவரை, இந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. 
 
காரணம் அங்கு அந்த அரசிற்கு தகுதி இல்லை என்றார். ஒருவேலை, உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் கூட புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு பயப்படும் இந்த எடப்பாடி அரசு நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.