வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (12:13 IST)

அக்டோபரில் பள்ளிகள் திறப்பு? தீவிர ஆலோசனையில் ஆளும் அரசு

அக்டோபர் மாத வாக்கில் படிப்படியாக திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வர 21 ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியமான ஒன்றாகும். 
 
இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் அக்டோபர் மாத வாக்கில் படிப்படியாக திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விரைவில் மத்திய அரசின் வழிகாட்டில்களோடு தமிழக அரசு 9 - 11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.