1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 6 ஜூலை 2015 (17:33 IST)

பள்ளி செல்ல மறுத்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி மரணம்

பள்ளி செல்ல மறுத்து தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவி 4 நாட்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
திண்டுக்கல்லை அடுத்த பாரதிநகரை சேர்ந்தவர் செந்தில் என்பவரின் மகள் தயாவதி (12). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த 1ஆம் தேதி காலையில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்துள்ளார். ஆனால், அவருடைய பெற்றோர் தொடர்ந்து பள்ளி செல்ல வற்புறுத்தியுள்ளனர்.
 
இதனால், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துப்பட்டாவால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், வெளியே சென்றிருந்த அவருடைய தாயார் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்ததும், மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
பின்னர், அருகிலுள்ளவர்களின் உதவியுடன், மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக மாணவியை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.