வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (20:23 IST)

மது ஒழிப்பு ஆர்வலர் சசிபெருமாள் காலமானார்

காந்தியவாதி சசி பெருமாள் இன்று காலமானார். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கன்னியாகுமரியில் உண்ணாமலைக் கடையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தொடர்ந்து 5 மணி நேரம் போராடினார். இதனால் உடல் நிலை பாதித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.