1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (15:08 IST)

ஜெயலலிதா பேனருக்கு மேல் வைக்கப்பட்ட சசிகலா பேனர்!

ஜெயலலிதா பேனருக்கு மேல் வைக்கப்பட்ட சசிகலா பேனர்!

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள். இந்த தீர்மானத்தை சசிகலாவிடம் ஒப்படைத்து அவரை பொதுச்செயலாளராக பதவியேற்குமாறு வலியுறுத்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை ஆகியோர் போயஸ் கார்டன் சென்றுள்ளனர்.


 
 
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம். ஆளும் கட்சியான அதிமுகவின் தலைமையை தீர்மானிக்கும் இந்த பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
 
அனைவரும் எதிர்பார்த்தது போலவே சசிகலா அதிமுக பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு தொடங்கும் முன்னர் அங்கு சசிகலாவின் பேனர் எதுவும் வைக்கப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனர் தான் வைக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சசிகலாவிம் பேனர்களை வைக்கும் பணியில் அதிமுகவினர் மும்மரமாக ஈடுபட்டனர். குறிப்பாக ஜெயலலிதாவின் பேனருக்கு மேலே சசிகலாவின் பேனர் வைக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.