1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (19:22 IST)

சசிகலாதான் முதல் எதிரி திமுக இல்லை: தீபா அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்த தீபா, எனக்கு சசிகலாதான் முதல் எதிரி, திமுக இல்லை என கூறியுள்ளார்.  


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் தீபா தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுஇறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அதில் அவர் கூறியதாவது:-
 
சசிகலா தரப்பில் போட்டியிடுபவர்கள் கட்டாயம் டெபாசிட் இழப்பார்கள். ஒ.பன்னீர்செல்வத்துடன் அன்றைக்கு நடைப்பெற்ற சந்திப்பு நிமத்தமானது. அது தவிர வேறு எதுவும் இல்லை. மக்களின் ஆதரவு இருக்கும் வரை நிச்சயமாக வெற்றிப் பெறுவேன். எனக்கு எதிரி சசிகலாதான், திமுக இல்லை. ஓ.பி.எஸ். அணியினர் இதுவரை என்னை சந்திக்கவில்லை. அவரது நிலைப்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.