1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (19:43 IST)

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த சசிகலா!

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த சசிகலா!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலைகுறித்து துணைவியார் ராஜாத்தியம்மாளிடம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கேட்டறிந்ததாக தகவல்கள் வருகின்றன.


 
 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரை தொண்டர்கள் யாரும் வந்து பார்க்க வேண்டாம் என கூறப்பட்டது. இதனையடுத்து அவருக்கு உடலில் கொப்பளங்கள் வருவதாகவும் இது ஒரு மரபு நோய், இதற்கு முன்னர் அவரின் அக்காவுக்கு இதே நோய் வந்ததாக கூறப்பட்டது.
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது இல்லத்தில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாளிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை சென்று விசாரித்து ராஜாத்தியம்மாள், சசிகலாவிடம் நீண்ட நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது.