1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (14:54 IST)

சசிகலாவால் அதிமுகவை பிளவு படுத்த முடியாது- ஜெயக்குமார்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிக்கலா விரைவில் செல்லவுள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டு சிறைத்தண்டனை முடிந்து வந்துள்ள சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அவ்வப்போது, அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வந்தார். இதுகுறித்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பானது.

இந்நிலையில்,விரைவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்லவுள்ளதாக சசிகலா கூறினார்.

இதுகுறித்து முன்னாள அமைச்ச்ர் ஜெயக்குமார், அம்மா, அம்மாதான்…மத்ததெல்லாம் சும்மா….முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண்…அவரல் அதிமுவின் பிளவு ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தலைமை அலுவலகம் இன்று எம்.ஜி.ஆர் மாளிகை எனப் பெயர்மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.