வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (15:45 IST)

எஸ் . ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய விருது அறிவிப்பு...

விருதுநகரை மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கடந்த 30 ஆண்டுகளாக இலக்கிய வெளியில் பல இலக்கிய படைப்புகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சாஞ்சாரம் என்ற நாவலை எழுதியற்காக இந்தியாவில் இலக்கியத்திற்காக சாகித்ய அகாடமியால் வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய விருதுக்கு  தேர்வாகி இருக்கிறார்.
 
எஸ். ராமகிருஷ்ணன் ரஜினின்  பாபா, ரன், சண்டக்கோழி போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
 
1984 ஆம் ஆண்டிலிருந்து கதை , சிறுகதை , நாவல் என்று தொடர்ந்து 25 எழுத்தை மட்டுமே வாழ்க்கையாக கொண்டு இருக்கும் எஸ் . ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
 
தற்போது சென்னையில் வசித்து வரும் எஸ் ராமகிருஷ்ணன் இதுகுறித்து கூறியதாவது:
’நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து சஞ்சாரம் என்ற நாவலை எழுதியற்காக எனக்கு சாகித்ய விருது அறிவித்துள்ளதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து எழுத்தை மட்டுமே நம்மி எழுதிவரும் எனக்கு இவ்விருது அடுத்த கட்டத்திற்கு என் படைப்புகள் கொண்டு செல்லும்.’ இவ்வாறு அவர் கூறினார்.