1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (15:46 IST)

தமிழ்நாட்டில் நேற்று வரை ரூ.68 கோடி பறிமுதல் - தலைமை தேர்தல் அதிகாரி

Satya Pradasaku
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
தற்போது  நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ்,  திமுக, அதிமுக,உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த நிலையில்,   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைய உள்ளதால் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ’’நேற்று வரை ரூ.68 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது. 3.60 கோடி ஆண்கள், 3.016 கோடி பெண்கள்  என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
 
இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில் தற்போது கூடுதலாக 177 வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையத்தின் சார்ப்ல் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. 
 
85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
 
39 பொதுபார்வையாளர்கள் 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர் ; நேற்று வரை ரூ.68 கோடி  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ‘’என்று தெரிவித்தார்.