1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (11:57 IST)

முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்!

கொரோனா தொற்று 3வது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட்டு வருகின்றனர். 
 
முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.