சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2016 (12:03 IST)

சிக்னலுக்காக நின்ற ரயிலில் கொள்ளை - தொடரும் ரயில் கொள்ளைகள்

வேலூர் அருகே சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த ரயிலில் புகுந்த கொள்ளையர்கள் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 

 
வேலூரை அடுத்துள்ள காட்பாடி அருகே புதனன்று சிக்னலுக்காக நீலகிரி எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலில் ஏறிய மர்மநபர்கள் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து ரயில் பயணிகள் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 
மேலும் ரயிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் ரயில் பயணிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.