1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (07:22 IST)

வாக்குப்பதிவுக்கு தயாரான ஆர்.கே.நகர். அதிகாலையிலேயே குவிந்த வாக்காளர்கள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும், வாக்காளர்களும் வாக்குப்பதிவுக்கு தயாராகி உள்ளனர். தொகுதி முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

258 வாக்குச்சாவடி மையங்களில் 1600 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்களித்தவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்ற ரசீது கொடுக்கும் மிஷினும் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இன்று ஆர்.கேநகர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கும் முன்னதாகவே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வரிசையில் வாக்களிக்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.