வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anadakumar - posted by Dinesh
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2016 (21:36 IST)

கரூரில் கல்வி உரிமைப் பாதுகாப்பு குழு அமைப்பு

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கரூர் மாவட்டத்தில் கல்வி உரிமை பாதுகாப்பு குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது.


 
 
கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாட்சா தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பொன்ஜெயராம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக்ரெய்மண்ட் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை தலைவர் எம்.ஏ.ராஜா மாவட்ட செயலாளர் பெரியசாமி வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கல்விக்குழு மாவட்ட அமைப்பாளர் பா.பெரியசாமி  பொருளாளாராக துரை தேர்வு செய்யப்பட்டனர். 
 
மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்திட வேண்டும் குலகல்வி முறையை அமுல்படுத்தும் மத்தியரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.