1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 31 ஜூலை 2014 (15:41 IST)

கணவன் கண் முன்னே மனைவியை கற்பழிக்க முயன்ற கயவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவன் கண் முன்னே மனைவியை கற்பழிக்க முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சிற்றரசு (வயது 33). இவர் கன்னியாகுமரியில் பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மது (31). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் கொட்டாரம் பெரியவிளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அங்குள்ள குளக்கரை அருகே நடந்து சென்றனர். 
 
அப்போது அங்கு மது அருந்தி விட்டு போதையில் உட்கார்ந்து இருந்த 4 பேர், சிற்றரசு மனைவி மதுவை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனே சிற்றரசு கூச்சல் போட்டார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் 4 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
 
இதுபற்றி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சிற்றரசு புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வம் புதூரை சேர்ந்த அன்பரசன் (23), கொட்டாரத்தை சேர்ந்த நிகில் (20), மகாராஜபுரத்தை சேர்ந்த சின்னகண்ணன் (22) ஆகிய 3 பேர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் மகாராஜபுரத்தை சேர்ந்த தில்லை (20) என்பவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.