வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (14:12 IST)

காங்கிரஸ் பல்லக்கைத் தூக்கியதால்தான் திமுக வென்றது – ராஜேந்திர பாலாஜி அடேடே பதில் !

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எனும் பல்லக்கை தூக்கியதால்தான் திமுக வென்றது என விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அதிமுக சார்பாக பத்திரிக்கையாளர்களை அடிக்கடி சந்தித்து சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் கருத்துகளைக் கூறி ஊடகங்களிலும் சமுக வலைதளங்களிலும் கேலிக்குள்ளாவதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்குப் பெரும்பங்குண்டு. இந்நிலையில் நேற்று சிவகாசியில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது  ‘திமுக, காங்கிரஸ் எனும் பல்லக்கைத் தூக்கிக் கொண்டதால்தான் வெற்றி பெற்றது. நேருக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஆசையில் தமிழக மக்கள் அளித்த வாக்குகளால்தான் திமுக வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவைச் சுமந்தது. திமுக, காங்கிரஸை சுமக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது’ எனத் தெரிவித்தார்.