1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2015 (11:14 IST)

மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில், நேற்று இரவு 11 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

காற்றும் பலமாக வீசியது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. 
 
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொட்டிய இந்த மழை அதிகபட்சமாக, சென்னை விமான நிலையத்தில் 56.4 மி.மீட்டராகப் பதிவாகியுள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், "வெப்பச் சலனம் நீடித்து வருவதால் இரவில் மழை பெய்து வருகிறது என்றும், இதனால், இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.