1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 18 ஜனவரி 2017 (15:45 IST)

தான் ஒரு அரசியல்வாதி என்பதை நிரூபித்த பொன்.ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் தான் ஒரு அரசியல்வாதி என்பதையும் அவருக்கு மக்களை விட கட்சிதான் முக்கியம் என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.



சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன்? தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அதற்குப் பெயர் போராட்டம்தான். ஜல்லிக்கட்டுக்காக புதிய சட்டம் கொண்டு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும் என்று கூறினார்.

இதன்மூலம் தொடர்ந்து கட்சிக்கு ஆதரவாகவும், பிற கட்சிகளை குற்றம்சாட்டியும் பேசி வருகிறார். இது பிரசார மேடை இல்லை என்பதை முதலில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிந்துக்கொள்ள வேண்டும். பின்னர் மக்களுக்காக பேச வேண்டும். அதைவிட்டு மீண்டும் அவர் ஒரு அரசியல்வாதி என்பதை வெளிப்படும் விதமாக அவரது கருத்துகள் அமைந்துள்ளது.

அவர் அரசியல் மட்டுமே செய்கிறார். தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்ற தமிழகம் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.