1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (10:43 IST)

சொத்து தகராறில் மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில், சொத்து தகராறில் தனது மகனை மண் வெட்டியால் தாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இளம்பிள்ளை அருகேயுள்ள முனியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளியான இவருக்கு வயது 45.  இவரது மகன் ஆனந்தராஜ். 25 வயதுடைய ஆனந்தராஜ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
 
இந்நிலையில், குடும்ப சொத்து காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் ஆத்திரமடைந்த செல்வம் மண்வெட்டியால் தனது மகன் ஆனந்தராஜின் தலையில் தாக்கியுள்ளார்.
 
இதனால், படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இது குறித்து மகுடஞ்சாவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.