வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 4 ஜனவரி 2017 (14:42 IST)

ஓ.பி.எஸ்.க்கு கடிதம் எழுதிய 118 கைதிகள்

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 118 ஆயுள் தண்டனைக் கைதிகள், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


 

 
ஒவ்வொரு ஆண்டும் அண்னா நூற்றாண்டு விழாவையொட்டி, சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
 
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 118 பேர் இம்மாதிரியான கடிதத்தை எழுதியுள்ளனர்.