வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 24 ஜூன் 2016 (20:45 IST)

கரூர் திருக்குறள் பேரவை சார்பில் கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

கரூர் திருக்குறள் பேரவை சார்பில் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.


 


கரூர் ஸ்ரீனிவாச புரத்தில் அமைந்துள்ள கரூர் திருக்குறள் பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூர் திருக்குறள் பேரவை நிறுவனரும், கரூர் மாவட்ட கண்ணதாசன் பேரவை தலைவருமான மேலை.பழநியப்பன் தலைமை வகித்தார். 
 
மேலும் திரு.வி.க மன்றத்தலைவர் அருணா பொன்னுசாமி, கவிஞர் கருவை வேணு, தமிழுறவுப்பெருமன்றம் நன்செய்புகழூர் அழகரசன், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளர் குமாரராஜா, திராவிடர் கழக நிர்வாகியும், தமிழ் ஆர்வலருமான கா.நா.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கவிஞர் கண்ணதாசனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கவி பாடி கொண்டாடினார்கள். 
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்