1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (22:30 IST)

அப்துல் கலாமுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் படத்திற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
நமது மண்ணின் மைந்தர் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்துகிறேன்.
 
இந்தியக் குடியரசின் முதல் மகன் குடியரசு முன்னாள் தலைவர் கலாம் அவர்களின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. கலாம் அவர்கள் மனிதப் புனிதர். அவரது அன்பும், எளிமையும், மனித நேயமும், கனவும், மாணவர்கள் - இளைஞர்கள் மீது கொண்ட பாசமும் இணையற்றது. இவை அவருக்கு எடுத்துக்காட்டுகள்.
 
அவரது மறைவு இந்தியவுக்கு ஈடுசெய்ய முடியாது பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இந்திய மக்கள் அனைவருக்கும் வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
கலாம் கண்ட கனவு இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், வல்லரசு, மாணவர்கள் - இளைஞர்கள் மேம்பாடு என்பதை அவருக்கு அஞ்சலி செலுத்தி நினைவில் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.