1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (12:31 IST)

இன்று பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்!

சிறையில் இருந்து இன்று ஒரு மாத கால பரோல் விடுப்பில் பேரறிவாளன் வெளியே செல்ல இருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒருவரான பேரறிவாளனுக்கு நேற்று 30 நாட்கள் மருத்துவ விடுமுறை கிடைத்தது. அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்க சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அதற்கான சட்ட நடவடிக்கைகள் எல்லாம் முடிந்து பேரறிவாளன் இன்று சிறையில் இருந்து வெளியாவார் என சொல்லப்படுகிறது.