வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (18:06 IST)

’திமுக செய்த தவறை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ - அமைச்சர் செல்லூர் ராஜூ

’திமுக செய்த தவற்றை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ - அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை மாநகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதூரில் நடைபெற்றது. அதில்,  கலந்துகொண்ட செல்லூர் ராஜூ மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
அப்போது அவர் கூறியதாவது : 
 
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு கண்டு வருகிறார்.  திமுக செய்த தவற்றை யாரும் மறக்க மாட்டார்கள். அதிமுகவுக்கு முடிவு கட்ட யாரும் பிறக்கவில்லை என தெரிவித்தார். 
 
மேலும்,  பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு ; சட்டமன்ற தேர்தல் என்பது வேறு, திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்க முடியாது.

திமுகவால்  பணத்தை கொடுத்து வாக்குகள் வாங்க முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள்... திமுக எப்போதும் தமிழகத்தின்  எதிர்க்கட்சியாகவே தொடரும்  என தெரிவித்தார்.