1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (09:49 IST)

பணம் கிடைக்க வேண்டி ’ அகல் விளக்கு ’ ஏற்றிய மக்கள்!!

கும்கோணம் பகுதியில் தங்கள் கஷ்டம் நீங்க பணம் கிடைக்க வேண்டி மக்கள் தன் வீட்டி வாசலில் அகல் விளக்கு ஏற்றி வைத்தனர்.
கும்பகோணத்திலுள்ள ஆனக்காரபாளையம் பகுதியில் நேற்று காலைவேளையின் போது மக்களிடம் சிலர் வீட்டின் முன்பு தாமரை கோலத்தை வரைந்து வைத்து அதன் நடுவில் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை  கிடைக்கும்  என்று சொன்னதுடன் அல்லாமல் அகல் விளக்கையும் ஒவ்வொரு வீடுகளுக்கும் தந்துசென்றுள்ளனர்.
 
இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் நேற்று இரவு நெடுநேரம் காத்திருந்து விட்டு தங்கள் இல்லத்தின் முன் தாமரை கோலத்தை வரைந்தனர். அதன் நடுவில் அகல் விளக்கையும் ஏற்றி வைத்தனர். 
 
ஆனால் இரவில் நெடுநேரம் வரை விழித்திருந்து பணம் கிடைக்குமென்று காத்திருந்த மக்களுக்கு யாரும்  பணம் கொடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.