1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (10:38 IST)

ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டாத மக்கள்!

சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைக்கு சென்றுள்ள மக்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்ல ஆசைப்படுவர்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம், பருவமழை ஆகிய காரணங்களால் அதிகமாக மக்கள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு இந்த விடுமுறைக்கு கிட்டத்தட்ட 15,000 பேர் வீட்டுக்கு செல்ல அரசு பேருந்துகளில் முன் பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 4,000 பேர் மட்டுமே முன் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.