வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 21 அக்டோபர் 2014 (12:25 IST)

சிதம்பரம் அருகே 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி பலி

சிதம்பரம் அருகே கட்டமுத்து என்பவர் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
நாஞ்சனூர் செட்டிமேடு என்ற பகுதியை சேர்ந்தவர் கட்டமுத்து. இவருக்கு அக், 20 நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உடனே  சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கட்டமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு  கொண்டு வந்தனர்.
 
புதுவை சுதானா நகர் அருகே வந்தபோது முன்னால் சென்ற பஸ்சை ஆம்புலன்ஸ் முந்தி செல்ல முயன்றது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது.
 
இதில் கட்டமுத்து மற்றும் அவரது உறவினர்கள் படுகாயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கட்டமுத்து பரிதாபமாக இறந்து போனார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.