வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்கப்படும்: சரத்குமார்

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்கப்படும்: சரத்குமார்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு பெறப்படும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 

 
திருவண்ணாமலையில் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் ஒருவரின் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சரத்குமார் கலந்து கொண்டு அந்தக் கடையை திறந்துவைத்தார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் சட்ட மன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி முக்கிய இடத்தைப் பெறும். மக்களிடம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. எனவே, வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது.
 
மேலும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனு விரைவில் பெறப்படும் என்றார்.