1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:30 IST)

எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் நேற்று  மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1267ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி,  தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  சேலம் மாவட்டத்தில்,  9 இடங்கள் தனிமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வேகமாகக் குணமடைந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் ! ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் .

மருத்துவர்கள் தான் ஆலோசனை கூற முடியும். அரசியல்வாதிகள் எப்படி ஆலோசனை கூற முடியும்? *மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றினால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும்  என தெரிவித்தார்.