வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Alagesan
Last Modified: சனி, 26 நவம்பர் 2016 (09:32 IST)

பாதிரியார் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

திண்டுக்கல்லில், 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 


 


 
திண்டுக்கல் என்.பஞ்சம்பட்டி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில், உதவி பங்கு தந்தையாக பணிபுரிந்தவர் அந்தோணி கிஷோர், 32, அதே பகுதியை சேர்ந்தவர் ஒன்பதாம் வகுப்பு மாணவி, 14 வயதே ஆன இவரை, காதலிப்பதாக கூறி, பாதிரியார்  கர்ப்பமாக்கினார். இது தொடர்பான புகாரை அடுத்து திண்டுக்கல் மகளிர் போலீசார், பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தனர். சிறுமியை கர்ப்பமாக்கிய, அந்தோணி கிஷோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதற்கு கலெக்டர், டி.ஜி.வினய் ஒப்புதல் அளித்ததை அடுத்து குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் பாதிரியார் அடைக்கப்பட்டார்.