1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (11:11 IST)

ஆபத்தான நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7 பேர்; 6 பேருக்கு ஒமிக்ரான் இல்லை!

ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு ஒமிக்ரான் இல்லை என உறுதியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய புதிய ஒமிக்ரான் பாதிப்பு ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கடும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் 6 பேருக்குமே ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.