1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 15 செப்டம்பர் 2014 (15:28 IST)

தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: பா.ஜ.க. குற்றச்சாற்று

வேட்பாளர்கள் மிரட்டப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாற்றி உள்ளார்.
 
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ''வேட்பாளர்கள் மிரட்டப்படுவது குறித்து புகார் அளித்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
 
உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.விற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தர வேண்டும். மேலும், தமிழக தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.