புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (17:08 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த பணம் பயன்படுத்தப்பட்டதா?"

நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ.75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நெல்சன் மனைவி மோனிஷாவின் வங்கி கணக்கில் இருந்து  ரூ.75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மொட்டை கிருஷ்ணனுடன், நெல்சனின் மனைவி மோனிஷா அடிக்கடி போனில் பேசியதும், போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மோனிஷாவிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா தொடர்பில் இருந்ததாகவும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் வெளிநாடு செல்வதற்கு முன் மோனிஷாவுடன் தொடர்ந்து பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran