1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (19:41 IST)

காலையில் கைதான நந்தினி தங்கை மாலையில் விடுதலை!

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக தந்தையுடன் போராட்டம் செய்து வரும் நந்தினி, சரியாக திருமணத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடி கைதான தந்தை ஆனந்தன், சகோதரி நந்தினி ஆகிய இருவரையும் விடுவிக்க நந்தினியின் தங்கையும் சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா கோரிக்கை விடுத்து மதுரை சட்டக்கல்லூரி முன் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருந்தார்.
 
இதனையடுத்து நிரஞ்சனாவை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் காலையில் மதுரையில் கைதான நந்தினியின் தங்கை நிரஞ்சனா மாலையில் விடுவிக்கப்பட்டார்