தொண்டர்களின் எண்ணங்களை ஞானதேசிகன் பிரதிபலித்துள்ளார்: ஜி.கே.வாசன்
மறைந்த மூத்த தலைவர்களின் ஆசியுடனும், வழிக்காட்டுதலுடன்படி செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் விலகியது குறித்து முன்னாள் மத்தியமந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இது குறிதத்து ஜி.கே. வாசன் கூறியதாவது:-
லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை ஞானதேசிகன் பிரதிபலித்துள்ளார். அதை முழுமனதோடு வரவேற்கிறேன்.
காமராஜர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட மறைந்த மூத்த தலைவர்களின் ஆசியுடனும், வழிக்காட்டுதலுடன்படி செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நீங்கள் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் அவர் அந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.