வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (11:04 IST)

புலி இசை வெளியீட்டு விழாவில் பேசியதால் ஏற்பட்ட மன உளைச்சல் : டி.ஆர் உருக்கம்

‘புலி’ பட இசை வெளியீட்டில், நான் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று டி.ராஜேந்தார் கூறியுள்ளார்.


 

 
விஜய் நடித்து வெளியான 'புலி' பட இசை வெளியீட்டில் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார். மேடையேறிய அவர் விஜயை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். அதன்பின் தன்னுடைய வழக்கமான பாணியில், விஜயை அந்தப் புலி, இந்தப் புலி என்று அடுக்கு மொழிகளில் பேசி விஜயையே கூச்சப்பட வைத்தார்.
 
இதற்கிடையில், நடிகர் ஜீவா நடித்து வெளிவரவுள்ள போக்கிரி ராஜா பட இசை வெளியீட்டில் டி.ஆர் கலந்து கொண்டு பேசினார். அப்போது “புலி பட விழாவில் நான் கலந்து கொண்டு பேசியது எல்லாம் என் மனதில் இருந்து வந்ததுதான். எனக்கு புலி என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும். மேலும் ஈழத்தமிழர்கள் மீது அதிக பற்று வைத்திருப்பவன் நான். அதனாலேயே அப்படி பேசினேன்.
 
ஆனால், நான் அப்படி பேசியதை பலர் கிண்டலடித்தார்கள். அதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் எந்த விழாவிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதனால்தான் நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை” என்று பேசினார்.