வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (16:12 IST)

மேண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

பிரபல இசைக் கலைஞர் மேண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
“பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
 
மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் சீனிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த மாண்டலின் சீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.
 
மத்திய அரசின் “பத்மஸ்ரீ“, “சங்கீத ரத்னா“ உட்பட பல விருதுகளைப் பெற்றவர் மாண்டலின் சீனிவாஸ். மாண்டலின் சீனிவாஸ் அவர்களின் மறைவு கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும்.
 
இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. மாண்டலின் சீனிவாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்“ இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.