1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 12 அக்டோபர் 2014 (13:29 IST)

சென்னை அருகே கள்ளக்காதல் விவகாரம் வாலிபர் வெட்டி கொலை

கள்ளக்காதல் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் முகமது ஷெரீப் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
வியாசர்பாடியில் வசித்துவருபவர் முகமது ஷெரீப். இவர் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய முகமது ஷெரீப் சாப்பிட்டு விட்டு வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்ப வில்லை.
 
இந்நிலையில், முகமது ஷெரீப் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. முகமது ஷெரீப்பின் உடலை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து காவல்துரையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கொலை செய்யப்பட்ட முகமது ஷெரீப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கும் வெங்கடேன் என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ளக் காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இதன்காரணமாக வெங்கடேசனுக்கும், முகமது ஷெரீப்புக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் இதுதொடர்பாக முகமது ஷெரீப் கடத்தப்பட்டுள்ளார். அப்போது முகமது ஷெரீப்பை கடத்திய கும்பல் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளது. 
 
இதுகுறித்து முகமது ஷெரீப் காவல்துறைக்கு புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் முகமது ஷெரீப் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
 
முகமது ஷெரீப்பை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளது. முகமது ஷெரீப்பை கடத்திய கும்பலே தற்போது அவரை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகிறார்கள்.
 
மேலும் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.