1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (23:16 IST)

மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது: கருணாநிதி கருத்து

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணத்திற்கான வரவேற்பு பொது மக்களிடையே பெருகி வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி - பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கேள்வி:- அதிமுகவை விட அதிகமாக எதிர்க்கட்சித் தலைவர்களில் சிலர், தளபதி மு.க.ஸ்டாலினின் "நமக்கு நாமே" பயணத்தைப் பற்றி மிக அதிகமாகத் திட்டுகிறார்களே?
 
பதில்:- தம்பி ஸ்டாலினின்  நமக்கு நாமே பயணத்திற்கான வரவேற்பு பொதுமக்களிடையே பெருகி வருகிறது என்பது புரிகிறதல்லவா? அவர்கள் தாக்கிப் பேசுவதில் இருந்தே, அந்தப் பயணத்தின் வெற்றி எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? காழ்ப்புணர்வு, வயிற்றெரிச்சல் காரணமாக அவர்கள் அப்படித் திட்டுகிறார்கள். அவர்களையெல்லாம் நினைத்துத்தான் அண்ணா அவர்கள் அப்போதே "வாழ்க வசவாளர்கள்" என்று கூறினார். அவர்கள் வசை பாடுவதிலிருந்தே தம்பி ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்திற்கான வரவேற்பு பொதுமக்களிடையே பெருகி வருகிறது என்பது புரிகிறதல்லவா? என தெரிவித்துள்ளார்.