1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:48 IST)

சமூகநீதியை கவனிக்க கண்காணிப்பு குழு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு வழங்கியுள்ள திட்டங்களில் சமூகநீதி கடைபிடிப்பதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் கல்வி, வேலைவாய்ப்பில் பல பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு, பதவி நியமனங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் சமூக நீதி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வகையிலும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சமூகநீதி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.