1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (11:10 IST)

ப்ரசாந்த் கிஷோர் எழுதி கொடுக்க, ஸ்டாலின் பேசுகிறார்! – அமைச்சர் ஜெயக்குமார் ரிட்டர்ன்ஸ்!

கொரோனா வைரஸிலிருந்து தமிழகத்தை காக்க எடப்பாடி அரசு தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக குறித்து யாராவது பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தால் உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுபவர் அமைச்சர் ஜெயக்குமார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அதிகம் கருத்துகளை தெரிவிக்காமல் இருந்து வந்த அமைச்சர் ஜெயக்குமார் தற்போது மு.க.ஸ்டாலினின் கண்டன அறிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக பேசியுள்ளார்.

தமிழக அரசின் அலட்சிய போக்கால் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும்  வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “திமுக தலைவர் தனது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் எழுதி தருவதை பேசுகிறார். “ஒண்றினைவோம் வா” திட்டம் கூட பிரசாந்த் கிஷோரின் ஏற்பாடுதான். அரசு ஜெட்வேகத்தில் செயல்படுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.