1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:35 IST)

இரண்டாவது வாரத்தில் புதிய காற்றழுத்தம்..! – வானிலை ஆய்வு மையம்!

வங்க கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வரும் நிலையில் அடுத்த வாரத்தில் புதிதாக ஒன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழையால் கடந்த சில மாதம் முதலாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாகவும் அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அடுத்த வாரத்தில் வங்க கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி நகரும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.