1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (14:36 IST)

மனோரமா உடல் தகனம் மயிலாப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு

மனோரமா உடல் தகனம் மயிலப்பூரில் உள்ள கைலாஸ்பூரம் மயானத்தில் பாரம்பரிய முறைப்படி உடல் தகனம் செய்யப்படும் என்று பேரன் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.


 


பழம்பெரும் நடிகை மனோரமா, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு இரவு காலமானார். இவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்குமார் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு கண்ணம்மாப் பேட்டை மின் மயானத்தில் மனோரமாவின் உடல் தகனம் செய்யப்படுகிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆனால், மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டாம் என்று மனோராமா விருப்பம் தெரிவித்திருந்ததால் பாரம்பரிய முறைப்படி மயிலப்பூர் கைலாஸ்பூரம் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்று அவரது பேரன் ராஜராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மனோரமாவின் இறுதி அஞ்சலி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.