வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 17 ஜூன் 2018 (13:12 IST)

டாஸ்மாக்கில் பீர் வாங்கிய இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்கள்

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் தனது சகோதரருடன் டாஸ்மாக்கில் பீர் வாங்கிய இளம்பெண்ணை 2 வாலிபர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் தனது தோழி மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். இவர்கள் மூவரும் நேற்று பீர் வாங்க டாஸ்மாக் சென்றுள்ளனர்.
 
அங்கு பீர் குளிர்ச்சியாக இல்லாததால், சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து தரும்படி கூறிவிட்டு அதற்காக காத்திருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இளம்பெண் மற்றும் அவரது தோழி, சகோதரர் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.