வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandkumar - Posted by Dinesh

கரூரில் லாரி மோதி பெண் பலி

கரூரில் லாரி மோதி பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.


 
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல்நிலையத்திற்குட்பட்ட கிழக்கு மேட்டுப்புதூரை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மனைவி கற்பகம்(55). இவர்  வெள்ளியணை ஜெகதாபி சாலையில் கிழக்கு மேட்டுப்புதூர் அருகே நடந்துசென்றுகொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி திடீரென கற்பகம் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கற்பகத்தின் மகன் மதியழகன் வெள்ளியணை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.